தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் யார் என்று கேட்கப்பட… அதற்கு தவறான பதில்களை  கூறினர் பங்கேற்பாளர்கள்.

இதில் இன்னொரு தகவலும் உண்டு.

நாம் தற்போது பாடும் தமிழ்த்தாய் வாழ்த்து முழுமையானது அல்ல.  மனோன்மனியம் பெ. சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து இதுதான்.

( இதில், திராவிடத்தை மட்டும் வைத்து விட்டு தமிழில் இருந்து தான் தென்னிந்திய மொழிகள் வந்தது என்ற சொற்றொடரையும், ஆரிய மொழி அழிந்தது எனற வார்த்தைகளையும் நீக்கி பாடுகிறோம்.)

 

“நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்

ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!”