நெட்டிசன்:

சாவித்திரி கண்ணன் முகநூல் பதிவு

ரஜினியை புரிந்து கொள்ள இந்த ஒரு சந்தர்ப்பம் போதுமானது…!

ஒரு கைதி தனது பணபலத்தால் சிறை அதிகாரிகளை விலை பேசி,ஷாப்பிங் மட்டுமே செல்ல முடியும் என்று இது வரை நாம் நினைத்திருந்தோம்! ஆனால்,அவரால் ஒரு சூப்பர் ஸ்டாரைக் கூட சிறைக்குள்ளிருந்து அச்சத்திற்கு உள்ளாக்கமுடியும் என்பது தெரிய வருகிறது.

ஒரு நேர்மையான கலைஞன்,சமுகப் பொறுப்புள்ள படைப்பாளி ஒரு போதும் சமுக விரோத சக்திகளிடம் சமரசமாக மாட்டான்!

எந்தமாதிரி பின்வாங்கியுள்ளார்கள் என்று கவனிக்க வேண்டும்.’’காசு கொடுத்தா ஹப்பிங் கூட போகலாம்’’ என்ற ஒரு சாதாரண நிதர்சனத்தை தான் – அதுவும் அனைவரும் அறிந்த உண்மையைத் தான் – சொல்லியுள்ளனரேயன்றி,வேறு எந்த புரட்சிகரமான வசனத்தையோ,புடலங்காயையோ சொல்லிவிடவில்லை!

அதற்கே ஒரு அந்தர்பல்டி என்றால் எப்படி?

‘’எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிக்கவோ,யார் மனதையும் புண்படுத்தவோ எழுதப்படவில்லை.இது,சிலரது மனதை புண்படுத்துவதாகத் தெரிய வந்ததால்,படத்திலிருந்து நீக்கப்படுவதாகத் தெரிவித்துக் கொள்கிறோம்!”

அதாவது, சசிகலா மனதை புண்படுத்தியதால் இந்த வசனத்தை எடுத்துவிடுகிறோம் என்று நேர்மையாக ஒத்துக் கொள்ளக் கூட தயக்கம்…..!

நாளை, ரஜினி ஆட்சிக்கு வந்தால் ஒரு ஊழல் அரசியல்வாதியை அல்லது பொதுப் பணத்தை திருடியவனை கைது செய்தால் அவர்களது மனம் புண்பட்டுவிடக் கூடும் ,ஆகவே கைது செய்யாதேர்கள்…’’ என்று காவல்துறைக்கு உத்தரவிடுவாரோ…என்னவோ!

நிஜத்தில் அல்ல, சினிமாவில் கூட ஒரு நிதர்சன உண்மையை சொல்வதில் இவ்வளவு கோழைத்தனம் இருக்குமென்றால்…,
இப்படியான ஒருவரை முகமுடியாக்கிக் கொண்டு, பின்னிருந்து அவரை இயக்கி ஆளலாம் என்ற சக்திகளின் சரியான சாய்ஸ்தான் ரஜினிகாந்த்!

ரஜினியைக் கலந்து பேசி,ரஜினியின் அறிவுறுத்தல்படி தான் லைக்கா நிறுவனம் இப்படி ஒரு அறிக்கை தயார் செய்தது என சினிமா வட்டாரத்தில் அனைவருக்கும் தெரியும் என்பதே உண்மை….