பெங்களூர்:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டது. இதை தொடர்ந்து ஆலையை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இது குறித்து ஸ்டெர்லைட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூட உத்தரவிட்டது துரதிர்ஷ்டவசமான முடிவு.

22 ஆண்டுகளாக வெளிப்படைத் தன்மையுடன் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் நடத்தி வந்தோம். தமிழக அரசின் அரசாணையை படித்த பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்’’ என்றார்.