சென்னை:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதி ரூ. 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து முதல்வர் பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘நிவாரண தொகையானது, இறந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

படுகாயமடைந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ. 3 லட்சத்தலிருந்து ரூ. 5 லட்சமாகவும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.