மதுரை:

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழக அரசுக்கும், காவல்துறைக்கு உலகம் முழுவதும் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், முன்னாள் சபாநாயகர் பிடிஆர்.பழனிவேல் ராஜனின் மகனும், மதுரை மத்திய தொகு சட்டமன்ற உறுப்பினரும், திமுக வலைதளப்பிரிவு நிர்வாகியுமான டாக்டர் பி. தியாகராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு மற்றும் பொதுமக்கள் இறப்பு,  தமிழகத்தில் ஒரு  தகுதியற்ற மற்றும் மிகவும் ஊழல் நிறைந்த ஜோம்பி அரசின் அபாயத்தை காட்டுகின்றது. தமிழக ஆட்சியாளர்கள் டில்லியை ஆட்சி செய்து வரும் சர்வாதிகாரிகளால் பிரம்மமான அடிமைகளாக இருக்கிறார்கள். இது ஜனநாயகத்தின் தோல்விக்கு உண்மையான விலை என்று குறிப்பிட்டுள்ளார்.