டெல்லி: வெள்ளை அங்கி அணிந்த மருத்துவர்கள் கடவுளின் உருவம் என்று பிரதமர் மோடி கூறி இருக்கிறார்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதி மக்களுடன் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: மகாபாரத போர் 18 நாட்களில் முடிய, கொரோனாவுக்கு எதிரான போர் முடிய 21 நாட்களாகும்.

நெருக்கடியான இந்த நேரத்தில், வெள்ளை அங்கிகளில் உள்ளவர்கள் கடவுளின் ஒரு வடிவம். அவர்கள் தங்கள் உயிரை பற்றி கவலைப்படாமல், மற்ற உயிர்களை காப்பாற்றுகின்றனர்.

சீனாவின் உகான் மாகாணத்தில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர இங்கிருந்து ஒரு மருத்துவக்குழு அனுப்பப்பட்டது. அந்த குழுவில் இருந்த மருத்துவர்கள், பணியாளர்கள் தான் உண்மையான ஹீரோக்கள்.

வீடுகளில் தங்கி இருக்கும் அவர்களை காலி செய்து செல்லுமாறு உரிமையாளர்கள் துன்புறுத்துவதாக செய்திகள் வருகின்றன. இது மிகவும் முக்கியமான ஒன்று. அவர்களை துன்புறுத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில டிஜிபிக்களிடமும் தெரிவித்து இருக்கிறேன் என்று கூறினார்.