பாலிவுட் நாயகி டாப்ஸி வீட்டில் கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அதுபோல், அனுராக் காஷ்யப் வீட்டிலும் சோதனை நடந்தது, இது தவிர வேறு சில இடங்களிலும் சோதனை நடந்தது.

சோதனை முடிந்து இருவரும் இன்று முதல் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினர்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள டாப்ஸி, கடந்த மூன்று நாட்களாக அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனை முடிந்தது, அதில் சில விஷயங்கள் :

1. பாரிஸ் நகரில் உள்ள எனது பங்களா சாவி என்று சொல்லப்படுவது  –  கோடை காலம் நெருங்குவதால் எனக்கு வேதனையாக உள்ளது.

2. அந்த 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக சொல்லப்படும் ரசீது, எனக்கு அந்த சம்பளம் தர மறுப்பவர்கள் தெரிந்து கொள்ளும்படி பிரேம் போட்டு வீட்டில் மாட்டிவைக்க வேண்டும்.

3. 2013ம் ஆண்டு ஏன் வீட்டில் வருமான வரி சோதனை நடந்ததாக நிதி அமைச்சர் நினைவுபடுத்தியது.

என்று தன் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை குறித்து கலாய்த்திருக்கிறார்.