செக்கச்சிவந்த வானம்’ படத்தைத் தொடர்ந்து, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம். இந்த படத்திற்காக கார்த்தி, விக்ரம், அமிதாப் பச்சன், ’ஜெயம்’ ரவி, ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, கீர்த்தி சுரேஷ் ,  ஆகியோரை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

சமீபத்தில் நடந்த கேன்ஸ் விழாவில் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாக அவரே பேட்டி அளித்து உறுதி செய்தார்

பேட்டி ஒன்றில் விக்ரம் இது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாவது உண்மை தான். நானும் அதில் நடிக்கிறேன் என கூறியுள்ளார்.

மலையாள செய்தி தொலைக்காட்சிக்கு நடிகர் ஜெயராம் அளித்த பேட்டியில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் படத்தின் கலை இயக்குநராக தோட்டாதரணி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதைப் படக்குழு உறுதி செய்துள்ளது.

டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு தொடங்கப்படும் நாளன்று தான் படக்குழுவினரை அதிகாரபூர்வமாக அறிவிக்க படக்குழு முடிவெடுத்துள்ளது.