a
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டர் ஓரிக்கையில் ஆயிரக்கணக்கான வாக்காளர்  அடையாள அட்டை, பூத் சிலிப் கள்  குப்பையில் கண்டெடுக்கப்பட்டது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் 16ம் தேதி  நடக்க இருக்கிறது. இத் தேர்தலில் 100 சத வாக்கெடுப்பு நடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இது குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கோடிக்கணக்கில் செலவு செய்து பிரச்சாரஙகளும் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரிக்கையில், குப்பையிலும் குட்டையிலும் பெரிய மூட்டைகளில் ஆயிரணக்கணக்கான வாக்காளர்  வாக்காளர் அட்டை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பூத் சிலிப்கள், வாக்காளர் பட்டியல்களும் அதில் கிடந்தன.
இவை காஞ்சிபுரம், உத்திரமேலூர் தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களின் அடையாள அட்டைகள் என்று தெரியவந்துள்ளது.
தற்போது இது குறித்து சார் ஆட்சியர் தம்புராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.