சென்னை: இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்றுவரும், இரண்டாவது சென்னை டெஸ்ட்டில், இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கடந்தமுறை சொல்லிக்கொள்ளும் வகையில் பந்துவீசாமல், நிறைய ரன்களை அள்ளிக்கொடுத்த நதீம் நீக்கப்பட்டுள்ளார். மேலும், பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும், ஒரு விக்கெட்கூட எடுக்காத வாஷிங்டன் சுந்தரும் இந்த ஆட்டத்தில் இல்லை.

அதேபோன்று, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவும் போட்டியில் இல்லை.

அவர்கள் மூவருக்கும் பதிலாக, அக்சார் படேல் மற்றும் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் மணிக்கட்டு ஸ்பின் பவுலர் எனப்படும் குல்தீப் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மற்றபடி, கடந்த போட்டியில் விளையாடிய வீரர்கள் அப்படியே ஆடுவார்கள். அக்சார் படேல் 7வது இடத்தில் களமிறங்குவார்.