ஸ்டாக்ஹோம்:  2020ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசானது நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் நோபல் பரிசுக்காக 211 தனி நபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என மொத்தம் 318 பேர் போட்டி பட்டியலில் உள்ளனர்.
இந்நிலையில் 2020ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரோஜர் பென்ரோஸ், ரெயின் ஹார்ட் ஜென்சில், ஆண்டிரியா கெஸ் ஆகிய 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கருந்துளை பற்றிய ஆய்வுக்காக 3 பேருக்கும் இந்த விருது தரப்படுகிறது. நாளை வேதியியல் துறைக்கும், 8ம் தேதி இலக்கியத்திற்கும் பரிசு அறிவிக்கப்படுகிறது. 9ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 10ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படும்.