தோஹா :
த்தாரில் நேற்று சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில் சாலைகளில் போடப்பட்டிருந்த தடுப்புகள், தொழிலாளர் குடியிருப்புகளின் மேற்கூரைகள், தற்காலிக தங்குமிடங்கள் என்று அனைத்தும் சூறைக்காற்றுக்கு சேதமானது.
இந்நிலையில், இன்றும் இது போன்று சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் கத்தார் வானிலை ஆய்வு மய்யம் எச்சரித்துள்ளது.
மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என்றும் கார்களில் பயணம் செய்வோர் இது போன்ற நேரங்களில் அருகில் உள்ள பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.