சென்னை

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு குறித்த வழக்கை தமிழக டிஜிபி ராஜேந்திரன் சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 22 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை  வெடித்தது.   காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் மரணம் அடைந்தனர்.  சுமார் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.   இதற்கு நாடெங்கும் எதிர்ப்பும் கண்டனங்களும் எழுந்துள்ளன.

இந்த துப்பாக்கி சூடு குறித்த வழக்கை தூத்துக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.   நேற்று தமிழக காவல்துறை துணை இயக்குனர் ராஜேந்திரன் ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.   அதில் அவர் இந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.