சென்னை:

மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மாநிலங்களை புறக்கணிக்க முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


கட்சி தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், இந்தி பேசும் மாநிலங்கள் தான் இந்தியாவை உருவாக்க முடியும் என்று ஒரு காலத்தில் நம்பியது எல்லாம் மலையேறிவிட்டது.

மாநிலங்கள் மீது மத்திய அரசு கவனம் கொள்ளும் வகையில் ஆக்கப்பூர்வமான அரசியல் உருவாகியுள்ள நேரம் இது.

எந்த கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும், மாநிலங்களை புறக்கணித்துவிட முடியாது. அனைத்து வகையிலும் மாநில அரசுகளை ஆதரிக்க வேண்டிய நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

திமுக கூட்டணி 38 தொகுதிகளில் போட்டியிட்டு, 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் அதிமுக துடைத்து எறியப்பட்டுள்ளது.

மேலும் 22 சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட்டு, 13 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
இதன்படி, சட்டப் பேரவையில் திமுகவின் பலம் 101- ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.