திரிபுரா:
திரிபுரா நேற்று தனது முதல் கொரோனா பாதிப்பை பதிவு செய்தது. நோயாளி உதய்பூரைச் சேர்ந்தவர் என்று திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் தகவல் தெரிவித்தார்.

தனது டுவிட்டர் இது தொடர்பாக பதிவிட்ட பிப்லாப் டெப், மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் நோயாளிக்கு சரியான கவனம் செலுத்தப்படுவதாகவும் கூறினார். வடகிழக்கு மாநிலங்களில் முறையே – அசாமில் 26, மணிப்பூரில் 2, மிசோரத்தில் 1, அருணாச்சல பிரதேசத்தில் 1, திரிபுராவில் 1 என பாதிப்புகள் உள்ளன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 693 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டின் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கையை 4,067 ஆகக் கொண்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று, நாட்டில் 76 சதவீத ஆண்கள் நேர்மறையான கொரோனா வைரஸ் நோயாளிகளாக உள்ளனர், இது ஆண்கள் ஆபத்தான தொற்றுநோயால் பாதிக்கப்படுவதைக் குறிக்கிறது, மேலும் 86 சதவிகித இறப்புகள் கொரோனாவுடன் வேறு உடல் உபாதைகள் காரணமாக ஏற்படுகின்றன என கூறியுள்ளது.

சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லவ் அகர்வாலின் கூற்றுப்படி, 47 சதவீத பாதிப்புகள் 40 வயதிற்குட்பட்டவர்களிடமும், 40 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களில் 34 சதவீத பாதிப்புகள் மற்றும் 19 சதவீத பாதிப்புகள் 60 வயதுக்கு மேற்பட்டவையாகும் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்க நோயாளிகளில் இறப்பு 63 சதவீதம் ஆகும் என்றார்.