திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தை கோவிலுக்கு உள்ளேயே ஏகாந்தமாய் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இந்த தகவலை திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி வெளியிட்டுள்ளார். அவர் மேலும் கூறி இருப்பதாவது:  செப்டம்பர் 19ம் தேதி முதல் 27ம் தேதி திருப்பதி மலையில் இந்த பிரமோற்சவம் நடக்கிறது.

ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தை கோவிலுக்கு உள்ளேயே ஏகாந்தமாய் நடத்த தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சாமி ஊர்வலம் கோயில் மாட வீதிகளில் நடைபெறாது. கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்து முழு அளவில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டால், அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் ஏழுமலையானின் நவராத்திரி பிரம்மோற்சவத்தை வழக்கம்போல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறினார்.