திருப்பதி
திருப்பதி கோவிலில் தரிசனத்துக்கு காத்திருக்கும் அறைகளில் உள்ளோருக்கு தேவஸ்தானம் பொங்கல் அல்லது உப்புமாவுடன் சட்னி வழங்குகிறது.
திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு காத்திருக்கும் அறைகள் கட்டப்பட்டு அங்கு காத்திருந்து பலரும் தரிசனம் செய்கின்றனர். அங்குளோருக்கு சிற்றுண்டி, தேநீர், காப்பி, பால் போன்றவைகள் வழங்கப் படுகிறது. சிற்றுண்டியாக பொங்கல், உப்புமா,. கிச்சடி போன்றவை வழங்கப் படுகிறது.
பக்தர்கள் குறை கேட்கும் நிகழ்வில் ஒரு சில பக்தர்கள் இந்த சிற்றுண்டியுடன் சட்னி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை பரிசீலித்த திருப்பதி தேவஸ்தானம் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளது
நேற்று தமிழ் வருடப் பிறப்பு முதல் சிற்றுண்டியுடன் சட்னியும் வழங்கப் படுகிறது. இதற்கு பக்தர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.