திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 109 காஸ் சிலிண்டர்களுடன் லாரி மாயமானதாக, லாரி ஓட்டுனர் முருகேசன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

லாரியை நிறுத்திவிட்டு மரத்தடியில் துங்கிய போது மர்ம நபர்கள் லாரிய¬ திருடிச் சென்றுவிட்டதாக முருகேசன் தெரிவித்தார். சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து லாரியை தேடி வருகின்றனர்.