சென்னை: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு  அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்  பாஜக அதிமுக  இடையே தொகுதி பங்கீடு குறித்து முதல்கட்ட பேச்சு வார்த்தை இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் நடைபெற்றது.

சட்டப்பேரவை தேர்தலில் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தலுக்கான காலஅவகாசம் குறைவாக இருப்பதால், கட்சிகள் இடையே கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் தொடரும், பாஜக இன்று அதிமுவுடன்   பேச்சுவார்த்தையை தொடங்கியது.  சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் பாஜக பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பாஜக சார்பில்  கிஷண்  ரெட்டி, வி.கே.சிங், சி.டி.ரவி, எல்.முருகன் கலந்துகொண்டனர்.  முதல்வர் பழனிச்சாமியுடன் பேசிய பின்னர் பாஜக குழு துணை முதல்வர் ஓ.பி.எஸ்-சை தனியாக சந்தித்து பேசினர். முதல்கட்ட பேச்சுவார்த்தை நிறைவுபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தல் பரப்புரைக்காக அமித்ஷா இன்று இரவு தமிழகம் வரும் நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. நாளை அமிஷ்வுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசுகிறார்.