சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிலையில் வாக்காளர் அட்டை இல்லாத வாக்காளர்கள்,  ஆதார் உள்பட  11 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  அதன்படி,

1.ஆதார் ஆட்டை

2.பான் கார்டு

3.ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்)

4.பாஸ்போர்ட் (Passport)

5.புகைப்படத்துடன் கூடிய பென்ஷன் ஆவணம்

6.வங்கி மற்றும் தபால் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம்

7.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு அடையாள அட்டை

8.அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகள்

9.தொழிலாளர் நலத்துறையால் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்ட்

10.மக்கள் தொகை பதிவேடால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்ட் (Smart card issued by RGI under NPR)

11.எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு கொடுக்கப்பட்ட அடையாள அட்டைகள்

இவற்றில் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டு சென்று உங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்.

மேலும், வயதானவர்கள் மாற்றுத் திறனாளிகள் தங்கள் வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு செல்வதற்கான இலவச வசதிகளை பெற்று கொள்ளலாம். தேர்தல் ஆணையத்தின் PWD என்ற செயலியை செல்பேசியில் நிறுவி, இதன்மூலம் வாக்குச்சாவடி அதிகாரியை அறிந்து கொண்டு சக்கர நாற்காலிக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் வாக்காளர்கள், வாக்குச்சாவடி, வாக்குச்சாவடி எங்குள்ளது வேட்பாளர்கள் உள்பட பல்வேறு தகவல்களை elections.tn.gov.in என்ற வலைத்தளத்திற்குள் சென்று தெரிந்து கொள்ளலாம்.

வாக்காளர்கள் வாக்களிக்க செல்லும்போது, முகக் கவசம் எடுத்து செல்ல வேண்டும். வாக்களிக்க செல்லும் இடத்தில் நீங்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பூத் சிலிப் இல்லையா, வாக்குச்சாவடி தெரியவில்லையா? இணையம் மூலம் தெரிந்துகொள்ள எளிய முறை….