சென்னை:

விமான நிலையத்தில், பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை பேட்டி கொடுக்கும் போது, பாஜகவுக்கு எதிராக அவரது மகன் டாக்டர்.  சுகந்தன் முழக்க மிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்  பாதுகாவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டார்.

ஏற்கனவே தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையுடன் பயணித்த, சோபியா என்ற மாணவி பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டதாக, கைது செய்யப்பட்டு ஒரு நாள் முழுக்க, புதுக்கோட்டை காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழக பாரதியஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது,  அவரது மகன் டாக்டர்  சுகந்தன் திடீரென பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டார். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. மகனின் செயலைக் கண்டு தமிழிசையும் அதிர்ச்சி அடைந்தார்.

பாதுகாப்பு காவலர்கள் உடடினயாக  டாக்டர்  சுகந்தன்  அங்கிருந்து அகற்றி அழைத்துச் சென்றனர். தனது மகன் மீது  பாஜக தலைவர் தமிழிசையும் புகார் எதும் கொடுக்காததால், அவரை காவல் துறையினர்  கண்டுகொள்ளாமல் அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக விமான நிலையத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.