சென்னை

வரும் 23 ஆம் தேதி அன்று நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கைககன நடைமுறைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் வெளியிட்டுள்ளார்.

நடைபெற்ற மக்களவை தேர்தலில் 7 கட்டமாக வாக்குப்பதிவுகள் நடந்தன. இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 அன்று வாக்குப்பதிவு நடந்தது. பதிவான வாக்குகள் அடங்கிய இயந்திரங்கள் பத்திரமக வைக்கபட்டுள்ளன. இந்த வாக்குகள் வரும் 23 ஆம் தேதி அன்று எண்ணப்பட உள்ளன. தற்கான நடைமுறைகல் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிக்கை வெளியிட்டுளார்.

அந்த அறிக்கையில், “வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் முழுவதும் மொத்தம் 45 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்கு எண்ணிக்கையின் போது ஒரு வேட்பாளருக்கு 16 முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த வாக்கு எண்ணும் பணியில் 15 ஆயிரத்து 904 பேர் ஈடுபட உள்ளனர்.

இந்த வாக்கு எண்ணும் மையத்திற்குள் பேனா உள்ளிட்ட எவ்வித கூராக உள்ள பொருட்களையும் உள்ளே எடுத்துச் செல்ல அனுமதியில்லை. மையத்தின் உள்ளே பேப்பர், பென்சில் மட்டுமே அனுமதிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்குத் தேவையான அனைத்தும் 100 மீட்டர் சுற்றளவில் கிடைக்கும் அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த 100 மீட்டர் சுற்றளவை தாண்டி வெளியில் செல்லும் முகவர்கள் மீண்டும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதைப் போலவே வாக்கு எண்ணிக்கை மையத்தினுள் தேர்தல் நடத்தும் அதிகாரி, பார்வையாளர் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட சில அதிகாரிகள் தவிர வேறு யாருக்கும் அலைபேசி பயன்படுத்த அனுமதியில்லை.

வாக்குகள் எண்ணிக்கையின் ஒவ்வொரு சுற்றுக்குப் பின்னும் முடிவுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இறுதியாக குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 விவிபாட் இயந்திரங்கள் எண்ணப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரப் பழுது காரணமாக வாக்குகள் எண்ண முடியாத நிலை ஏற்பட்டால் அதற்கான விவிபாட் இயந்திரங்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

நாளைக் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். எண்ணுவது தொடங்கப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்னரே அதிகாரிகள், முகவர்கள் என அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டு அவரவர் இடங்களில் அமர வைக்கப்படுவார்கள். உதாரணமாக ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் 6 சட்டப்பேரவை தொகுதி இருக்குமாயின் அந்த 6 தொகுதிகளுக்கான வாக்குகளும் ஒன்றாகச் சேர்த்து மொத்தமாக எண்ணப்படும்.

முதல் கட்டமாக ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான அனைத்து தபால் வாக்குகளும் ஒன்றாகச் சேர்த்து மொத்தமாக எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை நாளான மே 23 அன்று டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும்

நாளை நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி குறித்து தமிழகம் உட்பட 10 மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளோடு தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று ஆலோசனை நடத்துகிறார். இன்று காலை 11.30 மணிக்கு காணொலிக் காட்சி மூலமாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.” என கூறப்பட்டுள்ளது.