சென்னை: இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர் ராம. கோபாலன் உடல் நலக்குறைவால் தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (30.9.2020) இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

ராம. கோபாலன் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டதோடு, இந்து முன்னணி இயக்கத்திற்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். ராம. கோபாலனை இழந்து வாடும், அவரது இயக்க தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராம. கோபாலனின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற  எல்லாம் வல்ல  இறைவனைப்  பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.