சென்னை: ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் சோதனை அடிப்படையில் ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் தூத்துக்குடி, நெல்லை ஆகிய 2 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டது. பின்னர் இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதில் எந்த சிக்கலும் இல்லை என்றும், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக, அக்டோபர் 1ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் காமராஜ் ஏற்கனவே கூறி இருந்தார்.

இந் நிலையில், இந்த திட்டம் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமை செயலகத்தில் பிற்பகல், கூட்டுறவு அமைச்சர், உணவுத்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.