ஈரோடு: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதவாது: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார். சட்டசபை தேர்தலுக்கு முன்பு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

11ம் வகுப்பு தேர்வு ரத்து குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.  வல்லுநர்களுடன் கல்வித்துறை ஆலோசித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இறுதி முடிவு எடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.