சென்னை:

மிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சகோதரர், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வரின் சகோதரர் திமுகவில் இணைந்துள்ள நிகழ்வு அதிமுகவில் சலசலப்பை உருவாக்கி உள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சகோதரர் விஸ்வநாதன் (எடப்பாடியின் பெரியம்மா மகன்) இன்று அண்ணா அறிவாலயம் வந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணித்து தன்னை திமுகவின் உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எடப்பாடியின் சகோதரர் விஸ்வநாதன், சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

எடப்படி மீது கொண்ட அதிருப்தி காரணமாக அவர் திமுகவுக்கு தாவி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.