சென்னை:

மிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில்,  பெரும்பாலான உணவகங்ள் மூடப்பட்டு உள்ள. ஆனால், அம்மா உணவகம் மட்டும் ஏழைகளுக்கும், சாலையோர மக்களுக்கும்  உணவை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் பழனிச்சாமி இன்று காலை  சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்திற்கு, இன்று காலை திடீரென சென்று ஆய்வு நடத்தியவர், அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவை வாங்கி சாப்பிட்டார். தொடர்ந்து,  இங்குள்ள உணவகத்தில் சமைக்கப்படும் உணவு, அதன் தரம், சுத்தம், சுகாதாரம்,  ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்துள்ளனரா என்பனது குறித்தும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, தமிழக அமைச்சர் ஜெயக்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.