சென்னை

மிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா இல்லை எனப் பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதையொட்டி கொரோனா பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

அவ்வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடந்தது.

அத்துடன் அவருடைய முகாம் அலுவலக பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடந்தது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

அத்துடன் முதல்வரின் முகாம் அலுவலக பணியாளர் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.