சென்னை

ன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவ நிபுணர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் கொரோனா கட்டுக்குள் வராததால் மூன்று முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்றாம் கட்ட ஊரடங்கின் போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன் பிறகு சில தளர்வுகளுடன் இந்த மாதம் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

இந்த நான்காம் கட்ட ஊரடங்கு 31 அம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை.

இதையொட்டி இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.