சென்னை

புதிதாக உருவாக்கபட்டுள்ள செங்கல்பட்டு, தென்காசி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை மற்றும் திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களை 29 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்.

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டு, நெல்லை மாவட்டத்தைப் பிரித்து தென்காசி, விழுப்புரத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்டத்தை 3 ஆகப் பிரித்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கான எல்லைகளை வரையறை செய்யத் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் வருவாய் நிர்வாக ஆணையருடன் இணைந்து மக்கள் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தினர். மக்கள் கருத்துக்களின் அடிப்படியில் புதிய மாவட்டங்களுக்கான தாலுகாக்கள் மற்றும் எல்லைகள் வரையறுக்கப்பட்டு நேற்று முன் தினம் இந்த 5 மாவட்டங்களின் எல்லை வரையறை தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப் பட்டது.

இந்த புதிய மாவட்டங்களுக்கான ஆட்சியர் அலுவலகங்கள், தற்காலிகமான இடத்தில் செயல்படும் என்றும், ஆட்சியர் அலுவலகம் கட்ட இடங்களைத் தேர்வு செய்யும்படியும் தனி அதி காரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அத்துடன் இந்த புதிய மாவட்டங்களில் பணியாற்ற விரும்பும் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு அப்பணிகள் முடிவடைந்து  புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தலா 10 கோடி செலவில் வாகன நிறுத்த வசதிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த, 5 புதிய மாவட் டங்களை வரும் 29-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்து, ஆட்சியர் அலுவலகங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்தந்த மாவட்ட்ட அமைச்சர்கள் மற்றும் அதிமுக செயலாளர்கள் முதல்வரிடம்  புதிய மாவட்டங்களை நேரில் வந்து தொடங்கி வைக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.