சென்னை:
நாளை சென்னை சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் ஆலோசனை நடத்த இருக்கிறார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்திக்கவும் உள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பா.ஜ.க அரசின் விவசாயிகள் விரோத சட்டங்களை எதிர்த்து செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் நாடு தழுவிய தொடர் போராட்டங்களை பல கட்டங்களாக அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்திருக்கிறது. நாளை (24.09.2020) வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் சிறப்புச் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குண்டு ராவ் அவர்கள் நாளை காலை 9.30 மணியளவில் சென்னை, மீனம்பாக்கம் விமானநிலையத்திற்கு வருகை புரிகிறார். அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பிறகு சென்னை, சத்தியமூர்த்தி பவனில் கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி காங்கிரஸ் கட்சியினரைச் சந்திக்கிறார்.