சென்னை
மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 5015 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,56,385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 10,252 பேர் உயிர் இழந்து 6,02,038 பேர் குணம் அடைந்து தற்போது 44,095 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 1250 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இதுவரை சென்னையில் 1,82,014 பேர் பாதிக்கப்பட்டு 3,415 பேர் உயிர் இழந்து 1,64,448 பேர் குணம் அடைந்து தற்போது 13,751 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 39,397 பேர் பாதிக்கப்பட்டு 595 பேர் உயிர் இழந்து 36,555 பேர் குணம் அடைந்து தற்போது 2,195 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக கோவை மாவட்டத்தில் 37,117 பேர் பாதிக்கப்பட்டு 491 பேர் உயிர் இழந்து 31,709 பேர் குணம் அடைந்து தற்போது 491 பேர் சிகிச்சையில் உள்ளனர்.