சென்னை

மிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மாவட்டம் வாரியாக பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 5,692 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இதுவரை 5,63,691 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 9,076 பேர் உயிர் இழந்து 5,08,210 பேர் குணம் அடைந்து தற்போது 46,405 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 1,089 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 1,59,683 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு 3,111 பேர் உயிர் இழந்து 1,46,634 பேர் குணம் அடைந்து தற்போது 9,938 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 33,626 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு 530 பேர் உயிர் இழந்து 30,714 பேர் குணம் அடைந்து தற்போது 2,382 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக திருவள்ளூர் மாவட்டத்தில் 31,065 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு 533 பேர் உயிர் இழந்து 28,872 பேர் குணம் அடைந்து தற்போது 1,660 பேர் சிகிச்சையில் உள்ளனர்.