சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றுக்கு புதியதாக 6,352 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் புதியதாக 6,352 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஒட்டு மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,15,590 ஆக உள்ளது. இந்த தகவலை தமிழக சுகாதார துறை வெளியிட்டு உள்ளது.

அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் மட்டும் இன்று 1,285 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,33,173 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு இன்று 87 பேர் பலியாகி உள்ளனர். ஒட்டு மொத்தமாக  தமிழகத்தில் பலி எண்ணிக்கை எண்ணிக்கை 7,137 ஆக உயர்ந்துள்ளது. இன்று 6,045 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இதுவரை 3,55,727 பேர் குணம் பெற்று வீடு திரும்பி உள்ளனர். இன்று மட்டும் 80,988 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு உள்ளன. மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 46,54,797 ஆக இருக்கிறது.