சென்னை: நவீனகால சாணக்கியர் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் புகழாரம் சூட்டி உள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் அரசு விழாவில் பல்வேறு திட்டங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அடிக்கல் நாட்டினார். விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

அமித்ஷா மிக சிறந்த நிர்வாகி. அவர் ஒரு நவீனகால சாணக்கியர். ஜெயலலிதா வழியில் அதிமுக அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. மக்களுக்கான தேவையான திட்டங்களை நிறைவேற்றுவதில் நாட்டில் அதிமுக அரசு முதலிடத்தில் உள்ளது.

வரும் சட்டசபை தேர்தலில் 3வது முறையாக வெற்றிக்கனியை பறித்து, மீண்டும் ஆட்சியை பிடிக்கும். இனி வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜக, கூட்டணி தொடரும். தமிழகத்தின் முக்கிய நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என்று பேசினார்.