சென்னை

மிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சற்று முன்பு வீடு திரும்பி உள்ளார்.

இன்று காலை தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சூளை மேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர்.

இது அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையொட்டி அவர் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று மாலை வீடு திரும்புவர் எனவும் மருத்துவமனை அறிவித்தது.

துணை முதல்வர் மருத்துவமனைக்குச் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்ஹ்டர்

அவருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலரும் சென்றனர்.

சற்று முன்பு துணை முதல்வர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி உள்ளார்.