சென்னை:
சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த ஜூன் 30 வரை அவகாசம் அளிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை செலுத்த ஜூன் 30- ஆம் தேதி வரை அவகாசம் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மார்ச் 31-க்குள் கட்ட வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றிற்கு 3 மாதம் அவகாசம் அளித்து, அதாவது ஜூன் 30- ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.