சென்னை: தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆராய 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி தேர்வுகள்  ஒத்தி வைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் உள்ளன.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆராய 11 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா தலைமையில் இந்த குழு  அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் யுஜிசி அறிவுறுத்தல் படி தேர்வுகளை நடத்தமுடியுமா  என்பது குறித்து பரிந்துரைக்கும் என்று தெரிகிறது.