சென்னை: அரசு ஊழியர்கள் அலுவலகம் செல்ல ஏதுவாக பேருந்து வசதி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட 3 கட்ட ஊரடங்கு உத்தரவு நாளையோடு நிறைவடைகிறது. இந் நிலையில் 18 ம் தேதி முதல் 50 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட துவங்கும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.
இதனிடையே சென்னையில் தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்களுக்கு சென்று, வர பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் ஊழியர்கள் சொந்த செலவில் பயணிக்கும் வகையில் மாநகர பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்றும் அந்த  உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.