சென்னை:

மிழக சட்டமன்றத்தில் இன்று கஜா புயல் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சசாமி  கஜா புயலால் பாதிக்கப்பட்ட 6,39,495 குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கி வருவதாக தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 2ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதையடுத்து நேற்று மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சபை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், கேள்வி நேரம் முடிந்ததும் கஜா குறித்து விவாதம் நடைபெற்றது.

அப்போதுகஜா புயலால் சேதமடைந்த படகுகளுக்கு ஒன்றரை லட்சம் ரூபாயாக நிவாரண நிதியை உயர்த்தி தர உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கஜா புயல் பாதிப்பிற்கு தமிழக அரசு உடனடியாக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியதாக குறிப்பிட்ட அவர், எந்த இயற்கை சீற்றத்திற்கும் வழங்கப்படாத அளவுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

புயலால் பாதிக்கப்பட்ட 6 லட்சத்தி 39 ஆயிரத்தி 495 குடும்பங்களுக்கு தமிழக அரசால் நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், 3 லட்சம் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

13 கடற்கரை மாவட்டங்களில் 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, கடற்கரை பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

கஜா புயல் பாதிப்பில் உயிரை பணயம் வைத்து செயல்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

போர்க்கால அடிப்படையில் 99 சதவிகிதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நெற்பயிர்கள் முதிர்ந்துள்ள நிலையில், வயல்களில் கம்பங்கள் நட தாமதம் ஆவதாகவும்  கூறினார்.