டில்லி

ளுநர்கள் மாநாட்டில் பங்கேற்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டில்லி செல்கிறார்.

நாளை முதல் டில்லியில் அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் யுனியன் பிரதேச துணைநிலை ஆளுநர்களின் மாநாடு நடைபெற உள்ளது.  இந்த மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.  ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ள  மாநாட்டில் நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய பிரச்னைகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப் பட உள்ளது.

மொத்தம் ஆறு அமர்வாக நிகழும் இந்த மாநாட்டில் குடியரசுத் தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொள்கின்றனர்.    பிரதமர் மோடி சிறப்பு உரை ஆற்ற் உள்ளார்.   இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டில்லி செல்கிறார்.