சென்னை

மிழக அரசு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப்  பிரிக்க முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.  இந்த பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கி உள்ளது.    இந்தப் பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடிதம் எழுதி இருந்தது.

அந்தக் கடிதத்தில் “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும்.  தமிழக அரசு பின்பற்றும் இட ஒதுக்கீட்டுக்கு எவ்வித  பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும்.  அத்துடன் மாநில அரசின் கட்டுப்பாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் இயங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக அரசு அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து புதிய பல்கலைக்கழகம் தொடங்க முடிவு செய்துள்ளது.  இதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்ய 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.