சென்னை

மிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை எனச் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது கண்டறியப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.  தற்போது அவர் முழுமையாக குணடந்துள்ளதாகவும் அவருக்கு அரசு சிறந்த சிகிச்சை அளித்ததால் குணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் தெரிவித்த்ள்ளார்.

மேலும் அவருடைய இரத்த மாதிரியை தற்போது மீண்டும் பரிசோதித்ததில் அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு இல்லை எனக் கண்டறியப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர் தனது மற்றொரு டிவிட்டர் பதிவில்,”வணக்கம், கொரோனா வைரஸ் தொற்றுக்காக எடுக்கபட்ட் அனைத்து இரத்த மாதிரிகளையும் சோதித்ததில் நேற்று யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.

தற்போது சோதிக்க இரத்த மாதிரிகள் ஏதும் இல்லை.  தமிழக சுகாதாரத்துறை நமது  மாநிலத்தில் கொரோனா தாக்குதல் இல்லாமல் செய்யத் தேவையான கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்க உள்ளது” எனப் பதிந்துள்ளார்.