புதுச்சேரி:
கொரானோ தொற்று காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மதுக்கடைகளும் மூடப்பட்டன.

நேற்று தமிழகத்தில் மதுக்கடைகளை அரசு திறந்ததையடுத்து தமிழக குடிமகன்கள் நிம்மதியடைந்துள்ளனர். ஆனால், அண்டை மாநிலமான புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்காததால் புதுச்சேரி குடிமகன்கள் தமிழக எல்லை பகுதியிலுள்ள மதுக்கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி பகுதியான திருக்கனூர் எல்லையில் அம்மாநில காவல்துறை நடத்திய சோதனையில், இருசக்கர வாகனத்தில் தமிழகத்திலிருந்து மதுவாங்கி வந்த நபர் கைது செய்யப்பட்டு மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக புதுவையிலிருந்து சரக்கு கடத்தி வந்ததாக தமிழகத்தை சேர்ந்தவர்கள் கைது என்றே செய்தி படித்த நமக்கு இந்த கொரானோ ஊரடங்கு வரலாற்றை மாற்றி அமைத்திருக்கிறது.