துரை

மிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கொரோனாவில் இருந்து மீண்டதையொட்டி அளிக்கப்பட்ட வரவேற்பில் சமுக இடைவெளி மீறல் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது

தமிழக அரசில் கூட்டுறவுத் துறை அமைச்சரான செல்லூர் ராஜுவுக்கு இந்த மாதம் 10 ஆம் தேதி அன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அதற்கு முந்தைய வாரம் 4 ஆம் தேதி அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


 

அமைச்சர் செல்லூர் ராஜு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் முழுவதுமாக குணம் அடைந்ததால் தனது சொந்த ஊரான மதுரைக்கு திரும்பினார்

அப்போது அவருக்குக் கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

இந்த வரவேற்பில் சமூக இடைவெளி சரியாக கடைப்பிடிக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.