சென்னை: சென்னை மண்டலத்திற்குள் ஜூலை 6 முதல் வாடகை வாகனங்கள் இயங்க இ-பாஸ் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை மிக அதிகம்.
இந் நிலையில் சென்னைக்கு ஜூலை 6 முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் எல்லைக்குள் ஜூலை 6 முதல் வாடகை வாகனங்கள் இயங்க இ பாஸ் தேவையில்லை என்று போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஜூலை 6 முதல் போக்குவரத்து சிக்னல்கள் இயங்கும், வாகனங்களில் போலி இ-பாஸ் பயன்படுத்துவது தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.