சென்னை

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருடிய திருடனை காவல்துறையினர் இரண்டு மணி நேரத்தில் கண்டுபிடுத்து கைது செய்துள்ளனர்

சென்னை பழந்தாங்கல் பகுதியில் உள்ள நேரு காலனியில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி பால வேலாயுத தாஸ் என்பவர் வசித்து வருகிறார்.   சென்ற வியாழன் அன்று இவருடைய வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்றுள்ளது.   வீட்டில் இருந்த பீரோவில் இருந்து 35 சவரன் நகைகளும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் கொள்ளை அடிக்கப்பட்டது.

திருட்டு குறித்து பழந்தாங்கல் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது.    காவல்துறை உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு மர்றும் முதல் நிலைக் காவலர் மகாவீர் ஆகியோர் உடனடியாக செயல்பட்டு குற்றாவாளி ஜெகதீசனை 2 மணி நேரத்தில் கைது செய்து திருடப்பட்ட பொருட்களை மீட்டுள்ளனர்.

இதற்காக சென்னை காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் இருவரையும் அழைத்து பரிசு அளித்து பாராட்டி உள்ளார்.