சென்னை:  தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 3168 விதிமீறல்கள் நடைபெற்றுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உள்பட தமிழகத்திலும் ஏப்.14 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தேவை இல்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வாகனங்களில் வரக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். தடையை மீறி வாகனங்களில் வெளியில் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன் படி தமிழகம் முழுவதும் 3168 விதிமீறல்கள் நடந்திருக்கின்றன. 3779 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 1924 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. 3024 எப்ஐஆர் பதிவாகி இருக்கின்றன. கிட்டத்தட்ட ரூ.84,108 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.