சென்னை:

மிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து,  மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழக தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, ஓட்டுப்பதிவுக்கான நேரம் மற்றும் வாக்குச்சீட்டின் நிறம் பற்றிய விவரங்கள் அரசிதழில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மேலும் தேர்தல்  முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர்களுடன், மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனையும் நடத்தி இருக்கிறது.  எந்த நேரமும் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்ற சூழல் தான்  உள்ளது.

இந்த நிலையில், தேர்தல் அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர், நகராட்சி ஆணையர், காவல்துறை உயரதிகாரிகள் உள்பட மாநில உயர் அதிகாரிகள்,  தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.