சென்னை:

காதல் மனைவிக்கு டிமிக்கி கொடுத்து கடந்த  3ஆண்டுகளாக திருநங்கை ஒருவருடன் தலைமறை வாக வாழ்ந்து வந்தவர், டிக்டாக் செயலில் வெளியிட்ட வீடியோ காரணமாக சிக்கியுள்ளார். இந்த பரபரப்பு சம்பவம் விழுப்புரம் நடைபெற்ற உள்ளது.

விழுப்புரம் அடுகே உள்ள வழுதரெட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயப்பிரதாவுக்கும், கிருஷ்ணகிரி அருகே  உள்ள பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் காதலித்து  கடந்த 2013- ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அழகான 2 குழந்தைகளும் உள்ளது.

இந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு பணி நிமித்தமாக வீட்டை விட்டு சென்ற சுரேஷ், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. கணவரை அவரது காதல் மனைவி பல இடங்களில் தேடி வந்தார். மேலும் காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில்  டிக்டாக் இணையதளத்தில் வெளியான வீடியோ ஒன்றில், திருநங்கை ஒருவருடன் சுரேஷ் டான்ஸ் ஆடிய வீடியோ வெளியானது. இதைக் கண்ட ஜெயப்பிரதாவின்  உறவினர் ஒருவர், அவரிடம் கூறி, அந்த டிக்டாக் வீடியோவையும் காண்பித்துள்ளார்.

இதைக்கண்டதும் அதிர்ச்சி அடைந்த ஜெயப்பிரதா, திருநங்கையுடன் உள்ளது தனது காதல் கணவர் சுரேஷ்தான் என்பதை உறுதி செய்ததுடன், அதுகுறித்து உடடினயாக காவல்நிலையத்திலும் தகவல் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து  விழுப்புரத்தைச் சேர்ந்த திருநங்கை அமைப்பை சேர்ந்தவர்களிடம், காவல் துறையினர் விசாரித்த பொழுது,  சுரேஷுடன் இருப்பது ஓசூரை சேர்ந்த திருநங்கை என்பது தெரிய வந்தது. அதையடுத்து,  ஓசூருக்கு  சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தியதால், சுரேஷ் அந்த  திருநங்கையை திருமணம் செய்துகொண்டு, அவருடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்தது.

சுரேஷை திருநங்கையிடம் இருந்து  மீட்டு வந்த விழுப்புரம், காவல்துறையினர், அவருக்கு புத்திமதி கூறி, மனைவி ஜெயபிரதாவிடம் சேர்த்து வைத்தனர்.

இதுகுறித்து கூறிய, சுரேஷ், தான் ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்ததாகவும் அப்போது சில திருநங்கைகள் உடன் ஏற்பட்ட பழக்கத்தினால் திருநங்கையை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.